Author: Site Admin

2001 ஆம் ஆண்டில் பிறந்த ஆதித் பலிச்சா, இந்தியாவின் இளைய பில்லியன் டாலர் CEO களில் ஒருவராக உள்ளார். மும்பையில் வளர்ந்த பலிச்சா ஆரம்பத்தில் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் படிக்க வேண்டும் என்று கனவு கண்டார். ஆனால், கோவிட்-19 காரணமாக நினைத்ததை படிக்கவில்லை. இதனால், ஸ்டான்போர்டில் இருந்து வெளியேறி, இந்தியாவில் மளிகை விநியோகத் துறையை மாற்றியமைக்கும் மாற்று பாதையில் அவர் சென்றார். ஸெப்டோவின் விரைவான வளர்ச்சி பிக்பாஸ்கெட், டன்ஸோ மற்றும் அமேசான் போன்ற தொழில்துறை ஜாம்பவான்களுக்கு முக்கிய போட்டியாளராக மாறியுள்ள ஆன்லைன் மளிகை விநியோக தளமான ஸெப்டோவின் தலைமை நிர்வாக அதிகாரியாக பலிச்சா உள்ளார். 2021 இல் நிறுவப்பட்ட ஸெப்டோ வியக்கத்தக்க வேகத்தில் வளர்ந்துள்ளது. இந்நிறுவனம் ஆகஸ்ட் 2024 நிலவரப்படி ரூ. 11,600 கோடி (USD 1.4 பில்லியன்) மதிப்பீட்டை எட்டியுள்ளது. ஸெப்டோவின் விரைவான வளர்ச்சியானது பலிச்சாவின் புதுமையான அணுகுமுறை மற்றும் இ-காமர்ஸ் சந்தையின் வளர்ந்து வரும் தேவைகளைப் பயன்படுத்திக்…

Read More

2025ம் ஆண்டிற்கான அப்டேட் செய்யப்பட்ட ரேஞ்சு ரோவர் ஸ்போர்ட் மாடலை இந்தியாவில் வெளியிட்டுள்ளது லேண்டு ரோவர். இந்த மாடலானது இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படவிருக்கிறது. மேலும், இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் முதல் ரேஞ்சு ரோவர் ஸ்போர்ட் மாடலாகவும் இது வெளியாகியிருக்கிறது. இந்த அப்டேட் செய்யப்பட்ட புதிய மாடலை ரூ.1.45 கோடி எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது லேண்டு ரோவர். இது ஸ்டாண்டர்டு வீல்பேஸ் வெர்ஷன் மட்டுமே, லாங் வீல்பேஸ் வெர்ஷன் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2025 ரேஞ்சு ரோவர் ஸ்போர்ட் வசதிகள் இந்த அப்டேட் செய்யப்பட்ட மாடலில், செமி ஏர்லைன் லெதர் சீட்கள், மஸாஜ் வசதியுடன் முன்பக்க சீட்கள், ஹெட்ஸ் அப் டிஸ்பிளே, அடாப்டிவ் முன்பக்க LED விளக்குகள், 13.1 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகிய வசதிகளைக் கொண்டிருக்கிறது. 2025 ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட்டின் வெளிப்புறம் புதிய டிஜிட்டல் எல்இடி ஹெட்லைட்களுடன் புதிய அப்டேட்டைப் பெறுகிறது. அடாப்டிவ் லைட்டிங் செயல்பாட்டை வழங்குகிறது.…

Read More

பங்குகளை விற்பது, சந்தை நிலவரங்கள், நேரம் மற்றும் முதலீட்டு உத்திகளைப் பொறுத்து லாபம் அல்லது இழப்பு அமையும். அப்படி பங்குகளை விற்று செல்வந்தர் ஆனவர்களில் SaaS நிறுவனமான Freshworks இன் இணை நிறுவனர் மற்றும் செயல் தலைவர் கிரிஷ் மாத்ருபூதம் ஒரு சிறந்த உதாரணம். டிசம்பர் 2024 இல், அவர் கிட்டத்தட்ட 2.5 மில்லியன் பங்குகளை விற்று $39.6 மில்லியன் (இந்திய மதிப்பில் ரூ. 336.41 கோடி) சம்பாதித்துள்ளார். ஒரு பங்குக்கு $15.33 முதல் $16.50 வரையிலான விலைகளுடன் பங்கு பரிவர்த்தனைகளில் விற்பனை நிகழ்ந்துள்ளது. கிரிஷ் மாத்ருபூதம் 12 ஆம் வகுப்பு தோல்வி அடைந்த போது உறவினர்கள் அவரை பல விதங்களில் விமர்சனம் செய்தனர். “ரிக்ஷா இழுப்பவர்” என்றெல்லாம் முத்திரை குத்தினர். இந்த சவால்களை எல்லாம் எதிர்கொண்ட போதிலும், ஊக்கத்துடன் போராடினார் மாத்ருபூதம். HCL மற்றும் Zoho இல் வெற்றிகரமான வாழ்க்கைக்குப் பிறகு, அவர் துணைத் தலைவராக உயர்ந்தார். கடந்த 2010…

Read More

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) விண்வெளியில் தனது முதல் ரோபோட்டிக் கையை வெற்றிகரமாக இயக்கியுள்ளது, இது நாட்டின் விண்வெளி ஆய்வு முயற்சிகளில் குறிப்பிடத்தக்க படியாக உள்ளது. இந்த சாதனை இஸ்ரோவின் எதிர்கால விண்வெளி திட்டங்களில் முக்கிய ஆதாரமாகும். இஸ்ரோவின் வரலாற்று மைல்கல் கடந்த டிசம்பர் 30ஆம் தேதி விண்ணில் அனுப்பப்பட்ட PSLV C60 ராக்கெட்டில் டாக்கிங் செயற்கை கோள்களுக்கு அடுத்தபடியாக அனுப்பப்பட்ட 24 உப செயற்கை கோள்களும் 355 கிலோமீட்டர் உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டன. அதில் ஒன்றுதான் RRM-TD எனப்படும் ரோபோட்டிக் கரங்கள். இந்தியாவின் முதல் ரோபோட்டிக் விண்வெளி திட்டமாக இது அனுப்பப்பட்டது. விண்வெளி ரோபாட்டிக்ஸில் எதிர்கால முன்னேற்றங்களுக்கு இத்திட்டம் களம் அமைக்கிறது. ரோபோடிக் கையின் முக்கிய அம்சங்கள் இஸ்ரோவின் இனெர்ஷியல் சிஸ்டம்ஸ் யூனிட் (IISU) ஆல் உருவாக்கப்பட்ட RRM-TD ரோபோடிக் ஆர்ம் ஏழு நகரக்கூடிய மூட்டுகளைக் கொண்டுள்ளது. இது விண்வெளியில் உள்ள PS4-ஆர்பிட்டல் எக்ஸ்பெரிமென்ட் மாட்யூல் (POEM-4) முழுவதும்…

Read More

பொறியியல் மாணவர்களை தொழில்முனைவோர்களாக உருவாக்கும் விதமாக திருச்சி என்ஐடி கல்லூரி வளாகத்தில் என்ஐடி ஆராய்ச்சி மற்றும் கண்டுபிப்பு பூங்கா ரூ. 150 கோடி செலவில் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் அமைக்கப்படவுள்ளது. இது குறித்து திருச்சி என்ஐடி இயக்குனர் அகிலா மற்றும் முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் மகாலிங்கம் ஆகியோர் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது, வைர விழா காணவுள்ள திருச்சி என்ஐடி கல்வி நிறுவனத்தில் பயின்ற 48,000 முன்னாள் மாணவர்கள் உலகில் பல்வேறு இடங்களில் வசித்து வருகின்றனர். இவர்களில் 930 பேர் பல்வேறு நிறுவனங்களில் தலைமை செயலதிகாரிகளாகவும், 100க்கும் அதிகமானோர் பல்வேறு பணிகளிலும் பணியாற்றி கொண்டிருக்கின்றனர். 1987 ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் என்ஐடி முன்னாள் மாணவர்கள் சங்கம் எங்களது கல்வி நிறுவனம் மற்றும் மாணவர்களின் வளர்ச்சிக்கும் கல்விக்கும் உறுதுணையாக இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது வரும் ஜனவரி நான்காம் தேதி என்ஐடி முன்னாள் மாணவர்…

Read More

சென்னையில் பிரபலமான உதயம் திரையரங்கம் தற்போது நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது. அங்கு தியேட்டர் கட்டிடத்தை இடிக்கும் பணிகள் துவங்கப்பட்டு பிரபலமான அடுக்குமாடி குடியிருப்பு வர இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பே தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கான முதற்கட்டப் பணிகள் அனைத்தும் தற்போது துவங்கப்பட்டுள்ளன. உதயம் திரையரங்குகள் செயல்படாதது அதற்கு அருகில் உள்ள வியாபாரிகள் அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்துயுள்ளது. கடந்த 1983 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு உதயம் திரையரங்கம், சென்னையில் மிக வெற்றிகரமாக செயல்பட்ட பெரிய திரையரங்கங்களில் ஒன்று. கட்டப்பட்டபோது உதயம், சூரியன், சந்திரன் ஆகிய மூன்று திரைகளை கொண்டு செயல்பட்டது. பின்னாட்களில் சொத்துப் பிரச்சினை காரணமாக உதயம் தியேட்டர் இரண்டாக பிரிக்கப்பட்டது. அத்துடன் மினி உதயம் என்ற பெயரில் கூடுதலாக ஒரு திரை சேர்க்கப்பட்டது. மல்டி பிளக்ஸ் தியேட்டர்கள் பெரியளவில் கால் பதிக்காத காலக்கட்டங்களில் சென்னை ரசிகர்கள் கொண்டாடும் திரையரங்கங்களில் ஒன்றாக உதயம் திகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. 90 ஆம் ஆண்டுகளுக்கு பிறகு…

Read More

டாடா குழுமம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 5,00,000 புதிய உற்பத்தி வேலைகளை உருவாக்க உள்ளது, பேட்டரிகள், குறைக்கடத்திகள், மின்சார வாகனங்கள் மற்றும் சோலார் தொழில்கள் போன்ற துறைகளில் விரிவுப்படுத்துகிறது. டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன் கடந்த வியாழன் அன்று ஊழியர்களுக்கு தனது வருடாந்திர கடிதத்தில் நிறுவனத்தின் அடுத்தடுத்த திட்டங்களை பற்றி குறிப்பிட்டிருந்தார். 2024 இன் முக்கிய மைல்கற்கள் மற்றும் முதலீடுகள் சந்திரசேகரன் 2024 இல் குழுவிற்கான பல குறிப்பிடத்தக்க மைல்கற்களை எடுத்துரைத்துள்ளார். ஏழுக்கும் மேற்பட்ட புதிய உற்பத்தி ஆலைகளுக்கு அடிக்கல் நாட்டு விழாக்கள் நடத்தப்பட உள்ளது. குஜராத்தில் உள்ள தோலேராவில் இந்தியாவின் முதல் குறைக்கடத்தி ஃபேப் மற்றும் அஸ்ஸாமில் புதிய அவுட்சோர்ஸ் செமிகண்டக்டர் அசெம்பிளி மற்றும் சோதனை வசதி ஆகியவை இதில் அடங்கும். இந்த குழு கர்நாடகா மாநிலம் நரசபுராவில் எலக்ட்ரானிக்ஸ் அசெம்பிளி ஆலைகளையும், தமிழ்நாட்டின் பனப்பாக்கத்தில் வாகன ஆலைகளையும் அமைக்கிறது. குஜராத்தின் சனந்த் மற்றும் இங்கிலாந்தின் சோமர்செட் ஆகிய இடங்களில்…

Read More

முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயிப் அக்தர், தனது அபாரமான வேகத்திற்குப் பெயர் போனவர். ஒரு புதிய இலக்கை நோக்கி தனது பார்வையை அமைத்துள்ளார்: அமெரிக்க டாலர்களில் பாகிஸ்தானின் முதல் பில்லியனர் ஆக வேண்டும் என கனவுடன் பயணித்து வருகிறார். கிரிக்கெட்டில் இருந்து ரியல் எஸ்டேட் மற்றும் ஒளிபரப்பு உள்ளிட்ட வணிக முயற்சிகளுக்கு மாறி, கணிசமான செல்வத்தை குவித்துள்ளார் அக்தர். மேல் நோக்கிய இலக்கு TNKS சேனலில் ஒரு நேர்மையான போட்காஸ்டில், ஷோயப் அக்தர் தனது லட்சியம் பற்றி பேசினார். பாகிஸ்தானின் செல்வத்தையே மிஞ்சும் அளவிற்கு வருமானம் ஈட்டுவதில் தீவிரமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். அமெரிக்க டாலர்களில் முதல் பாகிஸ்தானிய பில்லியனர் என்ற தனது திட்டங்களை பற்றி விளக்கினார். இன்று, அக்தர் பாகிஸ்தானின் பணக்கார முன்னாள் கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக திகழ்கிறார். சோயிப் அக்தரின் தற்போதைய நிகர மதிப்பு சோயிப் அக்தரின் நிகர மதிப்பு $15 மில்லியன் (இந்திய மதிப்பில் ரூ. 190 கோடி)…

Read More

கேரளாவில் இருந்து தென்மாவட்டங்களில் சட்டவிரோதமாக கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு தவறிவிட்டதாக பாஜக கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணாவிட்டால், ஜனவரி மாதம் கேரளாவுக்குப் பேரணி நடத்தப் போவதாக அறிவித்துள்ளார். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட தமிழ்நாட்டின் தென்மாவட்டங்கள், கேரளாவில் இருந்து உயிரி மருத்துவம், பிளாஸ்டிக், கோழிக்கழிவுகள் கொட்டும் இடமாக மாறியுள்ளன என்று அண்ணாமலை குற்றம்சாட்டியிருக்கிறார். இப்பிரச்னைக்கு தீர்வு காண போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், சட்ட விரோத செயல்கள் தடையின்றி தொடர தமிழ்நாடு அரசு அனுமதிப்பதாகவும் விமர்சித்துள்ளார். தமிழக எல்லையோர சோதனைச் சாவடிகள், கேரளாவில் இருந்து வரும் கழிவுகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் சேகரிப்பு மையங்களாக மாறிவிட்டதாகவும் கூறியுள்ளார். அதிகாரிகளிடமும், முதலமைச்சரின் மக்கள் குறை தீர்க்கும் பிரிவிலும் பலமுறை புகார் அளித்தும், இது சம்பந்தமாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். குப்பை கொட்டுவதைத் தாண்டி, தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு…

Read More

இந்திய சினிமா சமீப வருடங்களாக பல வியத்தகு மாற்றங்களை கண்டுள்ளது. ஹிந்தி படங்கள் திரையுலகை ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் தென்னிந்திய சினிமா, குறிப்பாக தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழி படங்கள், நாடு முழுவதும் பரவலான பிரபலத்தைப் பெற்றுள்ளன. கேஜிஎஃப், பாகுபலி மற்றும் ஆர்ஆர்ஆர் போன்ற படங்கள் இதற்கு ஒரு சான்று. பல பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை முறியடித்து, உலகளவில் தென்னிந்திய படங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. மரைக்காயர்: அரபிக்கடலின் சிங்கம் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் மரைக்காயர்: அரபிக்கடலின் சிங்கம் கடந்த 2021 இல் வெளியானது. திரையரங்குகளில் ரிலீஸ் ஆவதற்கு முன்பே திரையுலகினர் மத்தியில் கவனம் ஈர்த்த இப்படம் அட்வான்ஸ் புக்கிங் மூலம் மட்டுமே ரூ. 100 கோடி வசூல் செய்தது. இந்த மைல்கல்லை எட்டிய முதல் இந்திய படம் என்ற பெருமையையும் பெற்றது. இப்படம் 4,100 திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இது தென்னிந்திய சினிமாவின் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க…

Read More