Close Menu
    CHANGE LANGUAGE
    What's Hot

    சுந்தர் பிச்சை பாதுகாப்பிற்கு இத்தனை கோடியா?

    11 May 2025

    இந்தியாவில் இணைய சேவையைத் துவங்க ஸ்டார்லிங்கிற்கு பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது.

    9 May 2025

    ஹுப்பள்ளியின் பிளாட்ஃபார்ம் தற்போது உலகிலேயே மிக நீளமானது.

    28 April 2025
    Facebook X (Twitter) Instagram YouTube
    • She Power
    • She Power
    • I AM NOW AI​
    YouTube Facebook Instagram LinkedIn X (Twitter)
    Channeliam / Channel I'M TamilChanneliam / Channel I'M Tamil
    • Homepage
    • Updates
    • Entrepreneur
    • Interview
    • Women Story
    • Startups
    • Technology
      • Mobile
    • Auto
      • Electric Vehicles
    • More
      • Entertainment
      • Defence
      • Government
      • Events
      • Funding
      • Gaming
      • Middle East
      • Travel
    Change Language
    Channeliam / Channel I'M TamilChanneliam / Channel I'M Tamil
    Change Language
    Home » விண்வெளி வீரர்களை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் பாதுகாப்பாக பூமிக்கு அழைத்து வந்துள்ளது.
    News Update

    விண்வெளி வீரர்களை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் பாதுகாப்பாக பூமிக்கு அழைத்து வந்துள்ளது.

    நாசா விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் தங்கள் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக ஒன்பது மாதங்கள் விண்வெளியில் கழித்துவிட்டு பூமிக்கு பாதுகாப்பாக திரும்பியுள்ளனர். மெக்சிகோ வளைகுடாவில் விண்வெளி வீரர்கள் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளனர்.
    Site AdminBy Site Admin19 March 2025No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn WhatsApp Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Telegram WhatsApp

    286 நாட்கள் விண்வெளியில் கழித்துவிட்டு பூமிக்குத் திரும்பியுள்ளனர் இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், அமெரிக்க விண்வெளி வீரர் பேரி வில்மோர் உள்ளிட்ட 4 பேர். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மூலம் அவர்கள் பத்திரமாக பூமிக்குத் திரும்பியுள்ளனர். இந்திய நேரப்படி அதிகாலை 3:40 மணிக்கு தங்களின் விண்வெளிப் பயணத்தை நிறைவு செய்துள்ளனர்.

    மெக்சிகோ வளைகுடாவில் பாதுகாப்பான தரையிறக்கம்

    சுனிதா வில்லியம்ஸ், பேரி வில்மோர் மற்றும் சக விண்வெளி வீரர்களான நிக் ஹேக் மற்றும் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோரையும் ஏற்றிச் சென்ற ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் க்ரூ-9 காப்ஸ்யூல், புளோரிடாவின் டல்லாஹஸ்ஸி கடற்கரைக்கு அருகிலுள்ள மெக்சிகோ வளைகுடாவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. மீட்பு செயல்முறையை கடற்படை சீல்களின் பாதுகாப்புக் குழு மிக நுணுக்கமாகக் கையாண்டது. காப்ஸ்யூலை மீட்புக் கப்பலுக்கு மாற்றுவதற்கு முன்பாக்க ஆய்வு செய்யப்பட்டது.

    அதிகாலை 4:25 மணியளவில், சுனிதா வில்லியம்ஸ் உட்பட விண்வெளி வீரர்கள் காப்ஸ்யூலில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டு, சுகாதார பரிசோதனைகளுக்காக ஒரு சிறப்பு மருத்துவ வசதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, அவர்கள் ஹெலிகாப்டர் மூலம் நாசாவின் ஹூஸ்டன் மையத்திற்கு மேலும், சில மருத்துவ பரிசோதனைகள் மற்றும் விளக்கங்களுக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

    8 நாட்கள் பயணம் 9 மாதங்கள் ஆனதற்கான காரணம்

    சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) எட்டு நாள் பயணத்தை மேற்கொண்டனர். ஆனான, அவர்களின் விண்கலம் ஸ்டார்லைனரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்படவே சுனிதா, வில்மோர் அங்கேயே தங்கும் நிலை ஏற்பட்டது. 8 நாட்கள் பயணம் 9 மாதங்களானது இதனால் தான். இந்த 286 நாட்களில் சுனிதாவும், வில்மோரும் விண்வெளியில் 121 மில்லியன் ஸ்டாட்யூட் மைல் பயணித்துள்ளனர். ஒரு ஸ்டாட்யூட் மைல் என்பது கிட்டத்தட்ட 5280 அடி எனக் கொள்ளலாம்.

    இந்நிலையில் அவர்கள் பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளது நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும். இது வணிக விண்வெளி பயணத்தின் திறன்களை வலுப்படுத்துகிறது மற்றும் நீட்டிக்கப்பட்ட விண்வெளி பயணங்களில் விண்வெளி வீரர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் எடுத்துக்காட்டுகிறது.

    After nine months in space, NASA astronauts Sunita Williams and Butch Wilmore safely returned to Earth aboard SpaceX Crew-9, landing in the Gulf of Mexico.

    astronaut return banner Butch Wilmore India Investment ISS mission NASA mission space travel SpaceX Crew-9 Sunita Williams Tamil Nadu
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp
    Site Admin
    • Website

    Related Posts

    சுந்தர் பிச்சை பாதுகாப்பிற்கு இத்தனை கோடியா?

    11 May 2025

    இந்தியாவில் இணைய சேவையைத் துவங்க ஸ்டார்லிங்கிற்கு பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது.

    9 May 2025

    ஹுப்பள்ளியின் பிளாட்ஃபார்ம் தற்போது உலகிலேயே மிக நீளமானது.

    28 April 2025

    அம்பானி ஒரு நாளைக்கு ரூ. 163 கோடி சம்பாதிக்கிறார்.

    28 April 2025
    Add A Comment

    Comments are closed.

    Editors Picks
    Top Reviews
    Advertisement
    About Us
    About Us

    Welcome to channeliam.com, the first AI-powered digital newsroom in India that revolutionizes the way news is produced, delivered, and consumed. Our media startup is dedicated to uplifting society by providing accurate, reliable and unbiased information.

    Subscribe to Updates

    Get the latest creative news about entrepreneurs, startups, and businesses.

    Updates
    • சுந்தர் பிச்சை பாதுகாப்பிற்கு இத்தனை கோடியா?
    • இந்தியாவில் இணைய சேவையைத் துவங்க ஸ்டார்லிங்கிற்கு பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது.
    • ஹுப்பள்ளியின் பிளாட்ஃபார்ம் தற்போது உலகிலேயே மிக நீளமானது.
    • அம்பானி ஒரு நாளைக்கு ரூ. 163 கோடி சம்பாதிக்கிறார்.
    • சிந்து நதி ஒப்பந்த நிறுத்தம்  பாகிஸ்தானின் உணவுப் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அடியாகும்.
    YouTube Facebook Instagram X (Twitter) Pinterest RSS
    © 2025 Likes and Shares Pvt Ltd. Powered By arbaneo

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Change Language
    Malayalam
    English
    Hindi
    Change Language
    Malayalam
    English
    Hindi