Author: Site Admin
நாக சைதன்யாவுக்கும் நடிகை ஷோபிதா துலிபாலாவுக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. நாக சைதன்யாவின் தந்தையும் நடிகருமான நாகார்ஜுனா அக்கினேனி வெளியிட்ட இந்த செய்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்த மகிழ்ச்சியான செய்திக்கு மத்தியில், நாகர்ஜுனா குடும்பத்தின் சொத்து மதிப்பு குறித்து தான் ரசிகர்கள் அதிகம் பேசிக் கொண்டிருக்கின்றனர். நாக சைதன்யாவின் முன்னாள் மனைவியும் நடிகையுமான சமந்தா விவாகரத்து பெற்று குடும்பத்தை விட்டு வெளியேறிய பிறகு அக்கினேனி குடும்பத்தின் சொத்து மதிப்பில் ரூ.100 கோடி குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2017 ஆம் ஆண்டு நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டதன் மூலமாக அக்கினேனி குடும்பத்தில் சேர்ந்தார் நடிகை சமந்தா. இந்த திருமணத்திற்குப் பிறகு, அவர்களின் மொத்த சொத்து கணிசமாக உயர்ந்தது மற்றும் சுமார் 100 கோடி இந்த குடும்பத்திற்கு வந்தது. இதனையடுத்து சமந்தாவுடனான விவகாரத்திற்கு பின் அக்கினேனி குடும்பத்தின் சொத்து மதிப்பில் ரூ.100 கோடி நஷ்டம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அக்கினேனி குடும்பம்…
அமெரிக்க குறுகிய விற்பனையாளரான ஹிண்டன்பர்க் ரிசர்ச் சமூக ஊடகங்களில் இரண்டு மூன்று நாட்களில் பேசு பொருளாக உள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ஹிண்டன்பர்க் மீண்டும் இந்திய சந்தைகளை குறி வைத்துள்ளது. ஏற்கனவே அதானி குழுமம் மீது குற்றம் சாட்டியிருந்த நிலையில், இம்முறை ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டு, இந்திய சந்தைக் கட்டுப்பாட்டாளரான செபியின் தலைவரான மதாபி பூரி புச்சின் மீது உள்ளது. அதானி நிறுவனத்துடன் தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனங்களில் மாதபிக்கும் அவரது கணவருக்கும் பங்குகள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதானி குழுமம் மீது குற்றச்சாட்டுகளை கூறி ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு ஹிண்டன்பர்க் அடுத்த சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஹிண்டன்பர்க் ரிசர்ச் என்பது நியூயார்க்கை தளமாகக் கொண்ட நிதி ஆராய்ச்சி நிறுவனமாகும். இந்த இயக்கத்தை உருவாக்கியவர் நாதன் ஆண்டர்சன். பெருநிறுவன மோசடிகள், ஊழல் கூட்டணிகள் மற்றும் மோசடிகளை வெளிக்கொண்டு வரும் நிறுவனங்களில் இதுவும் ஒன்றாகும். கணக்கியல் முரண்பாடுகள், சிக்கல் மேலாண்மை,…
இயக்குனர் நெல்சன் திலீப்குமாரின் முந்தைய படமான பீஸ்ட் கடந்த 2022 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியானது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யாத இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. ஆனால், அடுத்த ஆண்டு வெளியான ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படத்தை இயக்கி பீஸ்ட்டால் இழந்த பெயரை மீட்டெடுத்தார் நெல்சன். அதிக வசூல் செய்த இந்தியப் படங்களில் ஒன்றாக ஜெயிலர் சாதனை படைத்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் துவங்கவுள்ளது. இதற்காக நெல்சன் திலீப்குமாருடன் மீண்டும் ரஜினிகாந்த் இணைகிறார். இப்படத்திற்காக இயக்குனர் நெல்சனுக்கு ரூ.60 கோடி சம்பளம் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த செய்தி இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. இது உண்மையானால் நெல்சனின் திரை வாழ்க்கையில் அதிக சம்பளம் பெற்ற படமாக ‘ஜெயிலர் 2’ மாறும்.மேலும், ஜெயிலரை போலவே இரண்டாம் பாகத்திலும் மோகன்லால் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் கெஸ்ட் தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் மற்றொரு பாலிவுட் பிரபலம் இப்படத்தில் நடிக்கவுள்ளார்.…
கெட்டோசிஸ் என்பது சதீஷ் குமார் சுப்ரமணியன் என்பவரால் சென்னையில் நிறுவப்பட்டதாகும். iKicchn (Intelligent Kitchen), ஒரு ‘முழு தானியங்கி சமையலறை’ அல்லது கிட்டோசிஸ் தலைமையில் பெரிய அளவிலான உணவு தயாரிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட சமையல் தானியங்கு இயந்திரம். iKicchn என்பது ஒரு ரோபோ சமையல் சாதனம் ஆகும். இதன் மூலமாக ஒரே நேரத்தில் பல உணவுகளை தயாரிக்கலாம். பயனர்கள் உள்ளீடும் பொருட்கள் மற்றும் கட்டளைகளை கொண்டு சமையல் செயல்முறையை இவை தாங்களாகவே செய்கின்றன. இந்த புதுமையான இயந்திரம் மூலமாக 50 முதல் 500 பேருக்கு எங்கு வேண்டுமானாலும் உணவு தயாரிக்க முடியும். இதன் மூலம் உணவுத் தொழிலில் பணியாற்ற ஆட்கள் பற்றாக்குறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. “இந்த iKicchn லாபத்தை மேம்படுத்துவதற்கும் நிலையான தரத்தை உறுதி செய்வதற்கும் செலவு குறைந்த தீர்வை வழங்குகிறது” என்று சதீஷ் குமார் கூறுகிறார். 2005 ஆம் ஆண்டில் தான் சதீஷ் குமார் தனது மனைவியின் சமையலறை பணிச்சுமையை எளிதாக்குவதற்கும்,…
இந்த ஆண்டின் தொடக்கத்தில், உலகின் பில்லியனர்கள் பட்டியலை போர்ப்ஸ் வெளியிட்டது. இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ள ஷிவ் நாடார் பணக்கார தொழிலதிபர் மற்றும் கொடையாளர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் ஆவார். இவரின் நிகர சொத்து மதிப்பு $35.6 பில்லியன் அதாபது தோராயமாக ரூ.2,97,990 கோடி. இந்திய அளவில் மிக முக்கியமான ஐடி நிறுவனமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது HCL. இதன் நிறுவனர் ஷிவ் நாடார் என்பதை பலரும் அறிந்து வைத்திருப்பர். இவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர். 1945 ஜூலை 14ஆம் தேதி பிறந்தவர். இவரது பெற்றோர் பெயர் சிவசுப்பிரமணிய நாடார், வாமசுந்தரி தேவி. மதுரை பள்ளி, கல்லூரி படிப்பை முடித்தார். பின்னர் கோவை பி.எஸ்.ஜி கல்லூரியில் எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் எஞ்சினியரிங் படித்தார். இந்நிலையில் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டிய ஆர்வம் ஏற்பட்டது. இதையடுத்து 1976ஆம் ஆண்டு டெல்லியில் இந்துஸ்தான் கம்ப்யூட்டர்ஸ் லிமிடெட் (HCL) என்ற நிறுவனத்தை ஷிவ் நாடார் தொடங்கினார். இவருடன்…
கேரளாவில் வயநாடு பகுதியில் கடந்த திங்கள்கிழமை பெய்த கனமழை காரணமாக அடுத்தடுத்து 3 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் நூற்றுக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மண்ணில் புதைந்தனர். இங்கு உயிரிழப்பு எண்ணிக்கை 330-ஐ தாண்டிவிட்டது. மீட்பு பணியில் பாதுகாப்பு படைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. நிலச்சரிவின் காரணமாக காரணமாக பல இடங்கள் துண்டிக்கப்பட்டது. குறிப்பாக, சூரல்மலா – முண்டக்கை பகுதியை இணைக்கும் முக்கிய பாலம் துண்டிக்கப்பட்டதால் முண்டக்கை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக மாறியது. அங்கு மீட்புக் குழு செல்வதிலும் சிரமங்கள் ஏற்பட்டன. இதனையடுத்து, மீட்பு பணியை விரைந்து மேற்கொள்ள ‘பெய்லி’ எனப்படும் தற்காலிக பாலங்களை அமைக்க ராணுவத்தினர் முடிவு செய்தனர். இதற்கான உபகரணங்கள் டெல்லி மற்றும் பெங்களூருலிருந்து விமானங்கள் மூலம் கண்ணூர் விமான நிலையம் கொண்டுவரப்பட்டு, பின்னர் 17 லாரிகள் மூலம் வயநாடு கொண்டுவரப்பட்டு, தற்காலிக பாலங்கள் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்றது. மெட்ராஸ் சாப்பர்ஸ் என அழைக்கப்படும் ராணுவத்தின் மெட்ராஸ் இன்ஜினியரிங் படைப்பிரிவு…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். திரையுலகில் நுழைந்த துவக்க காலத்தில் தான் சந்தித்த விமர்சனங்கள், ஏளனங்கள் அனைத்திற்கும் தனது நடிப்பால் பதிலளித்து இன்று கோலிவுட் சினிமாவே வியக்கும் உச்ச நடிகராக திகழ்கிறார் தனுஷ் என்கிற வெங்கடேஷ் பிரபு கஸ்தூரி ராஜா. இதுவரை 50 படங்களில் நடித்துள்ள இவர் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என சினிமாவில் பல துறைகளிலும் முத்திரை பதித்து வருகிறார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஆடம்பர மாளிகையில் தற்போது வசித்து வருகிறார் தனுஷ். சுமார் ரூ.25 கோடி விலையில், மரத்தாலான தளம், மட்டு சமையலறை, மாடித் தோட்டம் உள்ளிட்ட அனைத்து நவீன வசதிகளையும் கொண்ட பிரம்மாண்டமான குடியிருப்பாக இந்த வீடு உள்ளது. மேலும் அவரது கவர்ச்சிகரமான சொகுசு கார்களின் தொகுப்பில் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் உட்பட பல வாகனங்கள் அடங்கும். ரூ.6.95 கோடி முதல் ரூ.7.95 கோடி வரை விலை…
இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமான டாடா குழுமத்தின் ஆட்டோமொபைல் நிறுவனமான டாடா மோட்டாரஸ், தமிழ்நாட்டை ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR) எலக்ட்ரிக் வாகனங்களுக்கான ஏற்றுமதி மையமாக மாற்றுவதற்கான திட்டம் வேகமாகச் செயல்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் ஆட்டோமொபைல் உற்பத்திக்கும், எலக்ட்ரிக் வாகன உற்பத்திக்கும் தலைநகரமாக விளங்கும் தமிழ்நாட்டுக்கு ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR) எலக்ட்ரிக் வாகன தொழிற்சாலை திட்டம் மிகவும் முக்கியமானதாக உள்ளது. செப்டம்பர் மாதத்திற்குள் 9000 கோடி ரூபாய் முதலீட்டில் அமையவுள்ள ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR) எலக்ட்ரிக் வாகன தொழிற்சாலையின் அடிக்கல் நாட்டும் விழா நடைபெற உள்ளது. இந்தியாவில் முதல் முறையாக இந்த தொழிற்சாலையில் தான் முழுமையாக உற்பத்தி செய்யப்படும் பிரீமியம் வாகனமாக இருக்கும். மேலும் அடிக்கல் நாட்டும் விழா பின்னர் அடுத்த 12 முதல் 18 மாதங்களில் புதிய தொழிற்சாலை செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா குழுமத்திற்கு, தமிழ்நாடு அரசு இந்த புதிய தொழிற்சாலை…
தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக திகழ்கிறார் நடிகர் சூர்யா. பெரும்பாலும் தமிழ் படங்களில் நடித்தாலும் உலக அளவில் ரசிகர்களை வைத்துள்ளார் சூர்யா. ‘நேருக்கு நேர்’ படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்த சூர்யா, தனது கெரியரில் அபாரமான உயரத்தை அடைந்துள்ளார். பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் மகனான இவர், பல போராட்டங்களுக்கு பிறகு தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். சினிமா வெற்றி மிகப்பெரிய புகழ் மற்றும் பொருளாதார வளர்ச்சியை சூர்யாவுக்கு கொடுத்தது. இதனால் சொந்த வீடுகள் மற்றும் சொகுசு கார்கள் என நாளுக்கு நாள் அவரின் சொத்துக்ள் பெரியளவில் வளர்ச்சி அடைந்தன. சமீபத்தில், மும்பையில் 70 கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பை சூர்யா வாங்கியுள்ளதாகவும், தனது மனைவி ஜோதிகா மற்றும் குழந்தைகளுடன் அங்கு அவர் குடியேறியுள்ளதாகவும் கூறப்படுகிறது. சூர்யாவின் மனைவியும் நடிகையுமான ஜோதிகா தனது இரண்டாவது இன்னிங்ஸில் சினிமாவில் கலக்கி வருகிறார். அத்துடன் தனது கணவர் சூர்யாவுக்கு மிகவும் ஆதரவாக…
ஆச்சி மசாலா என்று கேட்டாலே தெரியாத இந்தியர்களே இல்லை. ஆச்சி மசாலா என்பது இந்தியாவின் வளமான சமையல் பாரம்பரியத்தை உள்ளடக்கிய ஒரு பிராண்ட்டாக திகழ்கிறது. தென்னிந்தியா முழுவதும் சமையலறைகளில் இந்த மசாலாவை பயன்படுத்தாதவர்களே இல்லை. 1995 ஆம் ஆண்டு சென்னையில் பத்மசிங் ஐசக் என்பவரால் தொடங்கப்பட்ட ஆச்சி மசாலா ஃபுட்ஸ், சுவை மற்றும் பாரம்பரியத்தின் பாதையில் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. தமிழ்நாட்டின் நாசரேத் என்ற கிராமத்திலிருந்து, சமையல் உலகில் ஒரு பேரரசை உருவாக்கியதே ஐசக்கின் பயணம். விவசாயக் குடும்பத்தில் வளர்ந்த இவர், தனது தாயின் சமையலால் ஈர்க்கப்பட்டு, ஆச்சி மசாலா யோசனையை முதலில் கொண்டு வந்தார். சிறிது காலம் கோத்ரெஜில் ஹேர் டை விற்பனையாளராகப் பணியாற்றிய பிறகு, ஐசக் மசாலா வியாபாரத்தில் இறங்கினார். ஐசக்கின் முதல் தயாரிப்பு கறி மசாலா தூள். இது வெறும் 2 ரூபாய். சந்தையில் ஒரு புரட்சியை உருவாக்கிய இந்த மசாலா, ஆச்சி மசாலா என்ற…