Author: Site Admin
கேரளாவில் வயநாடு பகுதியில் கடந்த திங்கள்கிழமை பெய்த கனமழை காரணமாக அடுத்தடுத்து 3 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் நூற்றுக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மண்ணில் புதைந்தனர். இங்கு உயிரிழப்பு எண்ணிக்கை 330-ஐ தாண்டிவிட்டது. மீட்பு பணியில் பாதுகாப்பு படைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. நிலச்சரிவின் காரணமாக காரணமாக பல இடங்கள் துண்டிக்கப்பட்டது. குறிப்பாக, சூரல்மலா – முண்டக்கை பகுதியை இணைக்கும் முக்கிய பாலம் துண்டிக்கப்பட்டதால் முண்டக்கை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக மாறியது. அங்கு மீட்புக் குழு செல்வதிலும் சிரமங்கள் ஏற்பட்டன. இதனையடுத்து, மீட்பு பணியை விரைந்து மேற்கொள்ள ‘பெய்லி’ எனப்படும் தற்காலிக பாலங்களை அமைக்க ராணுவத்தினர் முடிவு செய்தனர். இதற்கான உபகரணங்கள் டெல்லி மற்றும் பெங்களூருலிருந்து விமானங்கள் மூலம் கண்ணூர் விமான நிலையம் கொண்டுவரப்பட்டு, பின்னர் 17 லாரிகள் மூலம் வயநாடு கொண்டுவரப்பட்டு, தற்காலிக பாலங்கள் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்றது. மெட்ராஸ் சாப்பர்ஸ் என அழைக்கப்படும் ராணுவத்தின் மெட்ராஸ் இன்ஜினியரிங் படைப்பிரிவு…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். திரையுலகில் நுழைந்த துவக்க காலத்தில் தான் சந்தித்த விமர்சனங்கள், ஏளனங்கள் அனைத்திற்கும் தனது நடிப்பால் பதிலளித்து இன்று கோலிவுட் சினிமாவே வியக்கும் உச்ச நடிகராக திகழ்கிறார் தனுஷ் என்கிற வெங்கடேஷ் பிரபு கஸ்தூரி ராஜா. இதுவரை 50 படங்களில் நடித்துள்ள இவர் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என சினிமாவில் பல துறைகளிலும் முத்திரை பதித்து வருகிறார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஆடம்பர மாளிகையில் தற்போது வசித்து வருகிறார் தனுஷ். சுமார் ரூ.25 கோடி விலையில், மரத்தாலான தளம், மட்டு சமையலறை, மாடித் தோட்டம் உள்ளிட்ட அனைத்து நவீன வசதிகளையும் கொண்ட பிரம்மாண்டமான குடியிருப்பாக இந்த வீடு உள்ளது. மேலும் அவரது கவர்ச்சிகரமான சொகுசு கார்களின் தொகுப்பில் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் உட்பட பல வாகனங்கள் அடங்கும். ரூ.6.95 கோடி முதல் ரூ.7.95 கோடி வரை விலை…
இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமான டாடா குழுமத்தின் ஆட்டோமொபைல் நிறுவனமான டாடா மோட்டாரஸ், தமிழ்நாட்டை ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR) எலக்ட்ரிக் வாகனங்களுக்கான ஏற்றுமதி மையமாக மாற்றுவதற்கான திட்டம் வேகமாகச் செயல்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் ஆட்டோமொபைல் உற்பத்திக்கும், எலக்ட்ரிக் வாகன உற்பத்திக்கும் தலைநகரமாக விளங்கும் தமிழ்நாட்டுக்கு ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR) எலக்ட்ரிக் வாகன தொழிற்சாலை திட்டம் மிகவும் முக்கியமானதாக உள்ளது. செப்டம்பர் மாதத்திற்குள் 9000 கோடி ரூபாய் முதலீட்டில் அமையவுள்ள ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR) எலக்ட்ரிக் வாகன தொழிற்சாலையின் அடிக்கல் நாட்டும் விழா நடைபெற உள்ளது. இந்தியாவில் முதல் முறையாக இந்த தொழிற்சாலையில் தான் முழுமையாக உற்பத்தி செய்யப்படும் பிரீமியம் வாகனமாக இருக்கும். மேலும் அடிக்கல் நாட்டும் விழா பின்னர் அடுத்த 12 முதல் 18 மாதங்களில் புதிய தொழிற்சாலை செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா குழுமத்திற்கு, தமிழ்நாடு அரசு இந்த புதிய தொழிற்சாலை…
தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக திகழ்கிறார் நடிகர் சூர்யா. பெரும்பாலும் தமிழ் படங்களில் நடித்தாலும் உலக அளவில் ரசிகர்களை வைத்துள்ளார் சூர்யா. ‘நேருக்கு நேர்’ படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்த சூர்யா, தனது கெரியரில் அபாரமான உயரத்தை அடைந்துள்ளார். பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் மகனான இவர், பல போராட்டங்களுக்கு பிறகு தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். சினிமா வெற்றி மிகப்பெரிய புகழ் மற்றும் பொருளாதார வளர்ச்சியை சூர்யாவுக்கு கொடுத்தது. இதனால் சொந்த வீடுகள் மற்றும் சொகுசு கார்கள் என நாளுக்கு நாள் அவரின் சொத்துக்ள் பெரியளவில் வளர்ச்சி அடைந்தன. சமீபத்தில், மும்பையில் 70 கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பை சூர்யா வாங்கியுள்ளதாகவும், தனது மனைவி ஜோதிகா மற்றும் குழந்தைகளுடன் அங்கு அவர் குடியேறியுள்ளதாகவும் கூறப்படுகிறது. சூர்யாவின் மனைவியும் நடிகையுமான ஜோதிகா தனது இரண்டாவது இன்னிங்ஸில் சினிமாவில் கலக்கி வருகிறார். அத்துடன் தனது கணவர் சூர்யாவுக்கு மிகவும் ஆதரவாக…
ஆச்சி மசாலா என்று கேட்டாலே தெரியாத இந்தியர்களே இல்லை. ஆச்சி மசாலா என்பது இந்தியாவின் வளமான சமையல் பாரம்பரியத்தை உள்ளடக்கிய ஒரு பிராண்ட்டாக திகழ்கிறது. தென்னிந்தியா முழுவதும் சமையலறைகளில் இந்த மசாலாவை பயன்படுத்தாதவர்களே இல்லை. 1995 ஆம் ஆண்டு சென்னையில் பத்மசிங் ஐசக் என்பவரால் தொடங்கப்பட்ட ஆச்சி மசாலா ஃபுட்ஸ், சுவை மற்றும் பாரம்பரியத்தின் பாதையில் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. தமிழ்நாட்டின் நாசரேத் என்ற கிராமத்திலிருந்து, சமையல் உலகில் ஒரு பேரரசை உருவாக்கியதே ஐசக்கின் பயணம். விவசாயக் குடும்பத்தில் வளர்ந்த இவர், தனது தாயின் சமையலால் ஈர்க்கப்பட்டு, ஆச்சி மசாலா யோசனையை முதலில் கொண்டு வந்தார். சிறிது காலம் கோத்ரெஜில் ஹேர் டை விற்பனையாளராகப் பணியாற்றிய பிறகு, ஐசக் மசாலா வியாபாரத்தில் இறங்கினார். ஐசக்கின் முதல் தயாரிப்பு கறி மசாலா தூள். இது வெறும் 2 ரூபாய். சந்தையில் ஒரு புரட்சியை உருவாக்கிய இந்த மசாலா, ஆச்சி மசாலா என்ற…
டெல்லியில் வரும் ஜூலை 27ஆம் தேதி நிதி ஆயோக் நடைபெறவுள்ளது. இதில் அனைத்து மாநில முதல்வர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்து பேசியவர், ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையை ஒட்டி நீண்ட அறிக்கையை கொடுத்துள்ளேன். அதனை ஒட்டி முக்கிய முடிவையும் எடுத்துள்ளேன். அதற்காக தான் உங்கள் அனைவரையும் பார்க்க வந்தேன். ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்துள்ள பட்ஜெட் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. மூன்றாவது முறையும் வாக்களித்த மக்களுக்கு இந்த பாஜக அரசு எந்த நன்மையும் செய்யவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ் நாட்டிற்கு என்னென்ன திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்பு அறிக்கையாக வெளியிட்டேன். சென்னை மெட்ரோவிற்கு நிதியை விடுவிக்க வேண்டும். கோவை, மதுரை…
எளிமையான தொடக்கத்திலிருந்து பல கோடி நிறுவனங்களின் உரிமையாளர்களாக உயர்ந்த தனிநபர்களின் எண்ணற்ற வெற்றிக் கதைகள் இந்தியாவில் உள்ளது. அந்த வகையில் கோபால் ஸ்நாக்ஸ் லிமிடெட்டின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான பிபின் ஹத்வானி, வணிக உலகில் அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சிக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. எளிமையான துவக்கத்தில் இருந்து வெற்றி படிக்கட்டை தொட்ட அவரது பயணம் பலருக்கும் பெரும் ஊக்கம். ஹத்வானி வளரும்போது, அவரது தந்தை கிராமத்தில் உள்ள சிறிய கடையில் இருந்து நடத்தும் வணிகத்தின் மீது எப்போதும் ஆர்வமாக இருந்தார். ஹத்வானியின் தந்தை வாயில் நீர் ஊற வைக்கும் குஜராத்தி தின்பண்டங்களைச் செய்து, பின்னர் சைக்கிளில் கிராமங்கள் வழியாகச் சென்று விற்பனை செய்பவர்.அவருக்கு பள்ளியிலிருந்து திரும்பி வந்ததும் உதவுவது ஹத்வானியின் வழக்கம். தனது தந்தையுடன் பணியாற்றிய அனுபவத்தைப் பெற்ற பிறகு, 1990 இல் தன்னுடைய தொழில் பயணத்தைத் துவங்கினார். தந்தையின் 4,500 ரூபாயைப் பயன்படுத்தி ஒரு சிற்றுண்டி வணிகத்தை ஆரம்பித்தார் ஹத்வானி.…
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் மூன்று நாள் திருமண கொண்டாட்டம் வெகு விமர்சையாக நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பிரபலங்கள் வருகை தந்தனர். ஆனால் அவர்கள் யாரும் ஆனந்த் மற்றும் ராதிகாவின் இதயங்களை திருடவில்லை. சாந்தேரி நாயக் என்ற மூதாட்டி திருமணத்திற்கு வந்ததால் தான் இருவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அதன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சாந்தேரி நாயக் யார்? சாந்தேரி, மும்பை மதுங்காவில் உள்ள மைசூர் கஃபே உரிமையாளரான நரேஷ் நாயக்கின் தாயார். மைசூர் கஃபே சைவ உணவுகளுக்கான பிரபலமான உணவகமாகும். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மைசூர் கஃபேவில் இருந்து சாந்தேரியின் உணவு கிடைக்கும் என்று கூறி ராதிகா மெர்ச்சண்டிடம் ஆனந்த் அம்பானி அறிமுகப்படுத்தினார். மைசூர் கஃபே அதன் பாரம்பரிய தோசை உணவுகளுக்கு பெயர் பெற்றது. இப்போது மைசூர் கஃபே சாந்தேரி நாயக்கின் மகன் நரேஷ் நாயக்கால் நடத்தப்படுகிறது. இருவரும் அம்பானி குடும்பத்தில் நடந்த…
முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, வீரேன் மெர்ச்சன்ட் மற்றும் ஷைலா மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்டை திருமணம் கடந்த ஜூலை 12 ஆம் பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளது. இவர்கள் திருமணத்திற்கான முந்தைய விழாக்கள் ஜாம்நகரிலும், ஐரோப்பாவிலும் கோலகலமாக நிகழ்ந்தது. இதனையடுத்து மும்பையில் ஆனந்த் அம்பானி திருமணம் நடந்து முடிந்துள்ளது. ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்திற்கு முந்தைய விழாக்களில் இருந்து தனது ஆடம்பரமான தோற்றத்திற்காக ஒவ்வொரு நாளும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார். தற்போது, அவரது தாயார் ஷைலா மெர்ச்சன்ட்டும் இணையவாசிகள் மத்தியில் கவனம் ஈத்து வருகிறார். கோடீஸ்வரரான வீரேன் மெர்ச்சன்ட் மற்றும் ஷைலா மெர்ச்சன்ட்டின் மூத்த மகள் தான் ராதிகா மெர்ச்சன்ட். என்கோர் ஹெல்த்கேர் லிமிடெட்டின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான வீரேன் மெர்ச்சண்டை மணந்த ஷைலா மெர்ச்சன்ட் வீட்டிலும், வணிக துறையிலும் தவிர்க்க முடியாத சக்தி. வெற்றிகரமான மருந்து நிறுவனமான என்கோர் ஹெல்த்கேரின் நிர்வாக…
தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. ஜூலை 1 ஆம் தேதி முதல் இந்த மின்கட்டண உயர்வு நடைமுறைக்கு வருவதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. ஆனால் இதற்கான அறிவிப்பு நேற்றைய தினம் ஜூலை 15ம் தேதி தான் வெளியாகியுள்ளது. இதன் மூலமாக மின்சார கட்டணம் 4 சதவிகிதத்துக்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளன. தற்போது புதிய மின்கட்டண உயர்வின் படி, 400 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ.4.60 வசூலிக்கப்பட்ட நிலையில், இனி ஒரு யூனிட்டுக்கு ரூ.4.80 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் 401 யூனிட் முதல் 500 யூனிட் வரை பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கு ரூ.6.15 வசூலிக்கப்பட்ட நிலையில் தற்போது அது ரூ.6.45 அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் 501 முதல் 600 யூனிட் வரை மின்சாரத்தை பயன்படுத்தும் பயனாளர்களுக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ.8.15 வசூலிக்கப்பட்ட நிலையில் ரூ.8.55 அதிகரிக்கப்பட்டுள்ளது. 601 முதல் 800 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ஒரு…