இந்தியா பொறியியல் துறையில் சிறந்த விளங்குவதற்கு சின்ன சான்றாக இங்குள்ள ரயில்வே பாலங்களை சொல்லலாம். அந்தளவிற்கு இந்தியாவின் ரயில்வே பாலங்கள் ஆச்சரியம் அளிப்பவை. நதிகள், மலைகளுக்கு இடையில் கண்களுக்கு விருந்தளிக்கும் விதமாக பல பாலங்கள் அமைந்துள்ளன. அந்த வகையில் இந்தியாவில் அமைந்துள்ள பிரபலமான ஐந்து ரயில்வே பாலங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.
இந்தியாவின் மிகச்சிறந்த பொறியியல் அதிசயங்களில் ஒன்று ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் ரயில் பாலம். ராமேஸ்வரம் தீவை பிரதான நிலப்பகுதியுடன் இணைக்கிறது இப்பாலம். இந்தியாவில் கடலின் குறுக்கே கட்டப்பட்ட முதல் பாலம் என்ற வரலாற்றுச் சிறப்பு பாம்பனுக்கு உள்ளது.
பாம்பன் ரயில் பாலம் கட்டுவதற்கான முயற்சிகள் 1870 களில் பிரிட்டிஷ் அரசாங்கம் இலங்கைக்கு வர்த்தக இணைப்பை விரிவுபடுத்த முடிவு செய்தபோது தொடங்கியது. இது அதிகாரப்பூர்வமாக 1914 இல் தொடங்கப்பட்டது. சுமார் 2.2 கிமீ வரை நீண்டு, 143 தூண்களுடன்-மும்பையின் பாந்த்ரா-வொர்லி கடல் இணைப்புக்குப் பிறகு இந்தியாவின் இரண்டாவது மிக நீளமான கடல் பாலம் இதுவாகும்.
பாம்பன் ரயில் பாலம் 90 டிகிரி கோணத்தில் மேல்நோக்கி திறக்கும் படகு இயக்கத்தை அனுமதிக்க ஷெர்சர் ரோலிங் லிப்ட் தொழில்நுட்பத்தில் செயல்படுகிறது. பாம்பன் பாலம் ரயில் பயணத்தின் போது அரபிக்கடலின் நீலப் பரப்பின் கொட்டும் காட்சிகளை எப்போதும் வியக்க வைக்கிறது.
இந்தியாவில் மற்றொரு மிகப்பெரிய பாலமாக பிரம்மபுத்திரா நதிக்கு மத்தியில் அமைந்துள்ள ரயில் கம் ரோடு பாலம் உள்ளது. அஸ்ஸாமில் உள்ள இந்த பாலம் பரந்து விரிந்த பிரம்மபுத்திராவின் அழகினை காணலாம்.
இந்தியாவில் மிக அழகான வழித்தடங்களை கொண்டதாக வேம்பநாடு ரயில் பாலம் உள்ளது. கேரளாவில் எடப்பள்ளி, வள்ளர்படம் பகுதிகளை இணைக்கும் இந்த பாலம் வேம்பநாடு நதிக்கு மத்தியில் அமைந்துள்ளது.
உலகின் மிக உயரமான ரயில் பாலம் என அறியப்படும் செனாப் பாலம் உதம்பூர்-ஸ்ரீநகர்-பாராமுல்லா ரயில் இணைப்பின் முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. செனாப் நதியின் மீது இந்தப் பாலம் கட்டப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டில் உள்ள ஈபிள் டவரை காட்டிலும் சுமார் 35 மீட்டர் உயரம் என தெரிகிறது. ஸ்டீல் மற்றும் கான்கிரீட் வளைவு பாலம்.
இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள ஷராவதி பாலம் 2,060 மீட்டர் (6,760 அடி) நீளம் கொண்டது. கர்நாடக இரயில்வேயில் உள்ள மிக நீளமான பாலமாக இது திகழ்கிறது. அழகிய காட்சிகளை கொண்ட இந்த பாலம் ஷராவதி நதிக்கு மேல் அமைந்துள்ளது.
Discover the top five stunning railway bridges in India that showcase engineering marvels and breathtaking views. From the Pamban Bridge to the Chenab Bridge, explore their beauty and significance.