Close Menu
    CHANGE LANGUAGE
    What's Hot

    அதிக சம்பளம் பெறும் இந்திய நடிகர்கள் பட்டியலில் முதலிடத்தில் ரஜினிகாந்த்.

    30 May 2025

    நெஸ்லேவின் ஆதரவை பெற்று யூனிகார்ன் மைல்கல்லை எட்டிய இந்தியாவின் ட்ரூல்ஸ்

    30 May 2025

    ஃபாக்ஸ்கானின் $1.5 பில்லியன் முதலீட்டில் தமிழ்நாடு வளாகம்

    30 May 2025
    Facebook X (Twitter) Instagram YouTube
    • She Power
    • She Power
    • I AM NOW AI​
    YouTube Facebook Instagram LinkedIn X (Twitter)
    Channeliam / Channel I'M TamilChanneliam / Channel I'M Tamil
    • Homepage
    • Updates
    • Entrepreneur
    • Interview
    • Women Story
    • Startups
    • Technology
      • Mobile
    • Auto
      • Electric Vehicles
    • More
      • Entertainment
      • Defence
      • Government
      • Events
      • Funding
      • Gaming
      • Middle East
      • Travel
    Change Language
    Channeliam / Channel I'M TamilChanneliam / Channel I'M Tamil
    Change Language
    Home » ரூ. 26858 கோடி சொத்துக்களுக்கு சொந்தக்காரரான அப்பல்லோ குழுமத்தின் உரிமையாளர்
    Uncategorized

    ரூ. 26858 கோடி சொத்துக்களுக்கு சொந்தக்காரரான அப்பல்லோ குழுமத்தின் உரிமையாளர்

    வணிகம் உட்பட எந்தத் துறையிலும் வயது என்பது வெறும் எண் என்பதை நிரூபித்தவர்கள் ஏராளம். அவர்களில் ஒருவர் மருத்துவ சாம்ராஜ்யத்தில் கொடிக்கட்டி பறக்கும் 90 வயதான தொழிலதிபர், டாக்டர். பிரதாப் சி. ரெட்டி.
    Site AdminBy Site Admin18 August 2024No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn WhatsApp Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Telegram WhatsApp

    வணிகம் உட்பட எந்தத் துறையிலும் வயது என்பது வெறும் எண் என்பதை நிரூபித்தவர்கள் ஏராளம். அவர்களில் ஒருவர் மருத்துவ சாம்ராஜ்யத்தில் கொடிக்கட்டி பறக்கும் 90 வயது தொழிலதிபரான டாக்டர். பிரதாப் சி. ரெட்டி. அவர் சொத்து மதிப்பு 26858 கோடிகள். இந்த வயதிலும் தினமும் காலை 10 மணிக்கு வேலையைத் தொடங்கி மாலை 5 மணி வரை வேலை செய்கிறார்.

    பிரதாப் ரெட்டி அப்பல்லோ மருத்துவமனையின் நிறுவனர் மற்றும் தலைவர். 1970 களில் அமெரிக்காவில் இருந்து திரும்பிய பிறகு 1983 இல் நிறுவனத்தை நிறுவினார். சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் பட்டப்படிப்பை முடித்த ரெட்டி, அமெரிக்காவில் இருதய மருத்துவராகப் பயிற்சி பெற்றார்.

    1970 களில் தனது தந்தையிடமிருந்து பெற்ற கடிதம் ரெட்டியின் வாழ்க்கையை மாற்றியது. 1979 இல் ஒரு நோயாளிக்கு தேவையான அறுவை சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்ல முடியாத சூழ்நிலையை எதிர்கொண்டவர், இந்தியாவில் இருதய சிகிச்சை மருத்துவமனையை அமைக்க முடிவு செய்தார்.
    எனவே அரசு மற்றும் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் ஆதரவுடன் சென்னையில் அப்பல்லோ மருத்துவமனையை நிறுவினார்.

    உலகின் சிறந்த சுகாதார அமைப்பை இந்தியாவில் உருவாக்குவதே அவரது நோக்கமாக இருந்தது. இன்று, அப்பல்லோ 71 மருத்துவமனைகள், 5,000 மருந்துக் கடைகள், 291 முதன்மை பராமரிப்பு கிளினிக்குகள், டிஜிட்டல் ஹெல்த் போர்டல் உள்ளிட்ட பலவற்றை மேற்பார்வையிட்டு வருகிறது.

    ரெட்டியின் நான்கு மகள்கள் ப்ரீதா, சுனீதா, ஷோபனா மற்றும் சங்கீதா ஆகியோர் அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் குழுமத்தை நடத்த உதவுகிறார்கள். மூத்த மகள் ப்ரீத்தா ரெட்டி மற்றும் மூன்றாவது மகள் ஷோபனா காமினேனி ஆகியோர் நிர்வாக துணைத் தலைவர்களாக உள்ளனர். இரண்டாவது மகள் சுனீதா ரெட்டி நிர்வாக இயக்குநராகவும் இளைய மகள் சங்கீதா ரெட்டி இணை நிர்வாக இயக்குநராகவும் உள்ளார்.

    70,000 கோடி ரூபாய்க்கு மேல் சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ள அப்பல்லோ நிறுவனத்தின் 29.3% பங்கு அந்த குடும்பத்திற்கு சொந்தமானது. அவருடைய குடும்பத்தின் மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த அவருடைய பத்து பேரக்குழந்தைகளில் ஒன்பது பேர் ஏற்கனவே வியாபாரத்தில் உள்ளனர்.

    “வெற்றி நம்மைத் தாழ்த்தி, நாட்டிற்காக மேலும் பலவற்றைச் செய்ய நம்மை ஊக்குவிக்க வேண்டும்,” என்று அவர் தனது வெற்றி பயணத்தை பற்றி கூறுகிறார். அப்பல்லோ அவரது தனிப்பட்ட சாதனை மட்டுமல்ல, இந்தியாவில் மிகப்பெரிய மருத்துவ புரட்சியை ஏற்படுத்தியதும் ஆகும்.

    At 90, Dr. Prathap C. Reddy, founder of Apollo Hospitals, continues to lead with unwavering dedication. Discover how his visionary leadership revolutionized Indian healthcare.

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp
    Site Admin
    • Website

    Related Posts

    பிரபாஸின் புதிய படத்திற்காக ரூ. 600 கோடி முதலீடு

    24 April 2025

    கேரளாவைச் சேர்ந்த முதல் பழங்குடியின விமானப் பணிப்பெண்

    17 April 2025

    தமிழ்நாட்டில் தொடங்கப்படும் இந்தியாவின் மிகப்பெரிய சூரிய மின் உற்பத்தி தொழிற்சாலை

    10 February 2025

    வருடாந்திர மற்றும் வாழ்நாள் டோல் பாஸ்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

    7 February 2025
    Add A Comment

    Comments are closed.

    Editors Picks
    Top Reviews
    Advertisement
    About Us
    About Us

    Welcome to channeliam.com, the first AI-powered digital newsroom in India that revolutionizes the way news is produced, delivered, and consumed. Our media startup is dedicated to uplifting society by providing accurate, reliable and unbiased information.

    Subscribe to Updates

    Get the latest creative news about entrepreneurs, startups, and businesses.

    Updates
    • அதிக சம்பளம் பெறும் இந்திய நடிகர்கள் பட்டியலில் முதலிடத்தில் ரஜினிகாந்த்.
    • நெஸ்லேவின் ஆதரவை பெற்று யூனிகார்ன் மைல்கல்லை எட்டிய இந்தியாவின் ட்ரூல்ஸ்
    • ஃபாக்ஸ்கானின் $1.5 பில்லியன் முதலீட்டில் தமிழ்நாடு வளாகம்
    • 2024 ஆம் ஆண்டில் சீனாவை விட அமெரிக்காவிற்கு இந்தியாவுக்கு அதிக ஐபோன்களை அனுப்பியுள்ளது.
    • 2026 ஆம் ஆண்டுக்குள் RCPL 60-70% சந்தைப் பங்கை இலக்காகக் கொண்டுள்ளது
    YouTube Facebook Instagram X (Twitter) Pinterest RSS
    © 2025 Likes and Shares Pvt Ltd. Powered By arbaneo

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Change Language
    Malayalam
    English
    Hindi
    Change Language
    Malayalam
    English
    Hindi