Close Menu
    CHANGE LANGUAGE
    What's Hot

    இந்தியாவின் இரண்டாவது பெரிய கிரிக்கெட் மைதானம் திறப்பு

    14 October 2025

    கால்பந்து விளையாட்டு ஜாம்பவானின் சுற்றுப்பயணம்: இந்தியா திரும்புவதை உறுதிப்படுத்திய மெஸ்ஸி.

    10 October 2025

    சிறந்த பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த Physics Wallah இணை நிறுவனர் அலோக் பாண்டே

    9 October 2025
    Facebook X (Twitter) Instagram YouTube
    • She Power
    • She Power
    • I AM NOW AI​
    YouTube Facebook Instagram LinkedIn X (Twitter)
    Channeliam / Channel I'M TamilChanneliam / Channel I'M Tamil
    • Homepage
    • Updates
    • Entrepreneur
    • Interview
    • Women Story
    • Startups
    • Technology
      • Mobile
    • Auto
      • Electric Vehicles
    • More
      • Entertainment
      • Defence
      • Government
      • Events
      • Funding
      • Gaming
      • Middle East
      • Travel
    Change Language
    Channeliam / Channel I'M TamilChanneliam / Channel I'M Tamil
    Change Language
    Home » சிவிஸ் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற முன்னாள் நடிகை
    News Update

    சிவிஸ் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற முன்னாள் நடிகை

    32 படங்கள் மற்றும் 48 தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்த பிறகு, எச்.எஸ். கீர்த்தனா திரையுலகிலிருந்து விலகி படிப்பில் கவனம் செலுத்தினார். ஆறு முறை தோல்விகளை சந்தித்த பிறகு, யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று இன்று கர்நாடகாவின் சிக்கமகளூரு மாவட்டத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
    News DeskBy News Desk21 September 2025No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn WhatsApp Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Telegram WhatsApp

    தென்னிந்திய திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் ஒரு காலத்தில் பரிச்சயமான முகமாக இருந்த எச்.எஸ். கீர்த்தனா, நடிப்பிலிருந்து இந்திய நிர்வாக சேவை (ஐ.ஏ.எஸ்) அதிகாரியாக மாறியுள்ளார். நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற தன்னுடைய தந்தையின் கனவைப் பின்பற்றி, சினிமாவில் இருந்து விலகி, சிவில் சர்வீஸ் துறையில் தனது பணியை துவங்கியுள்ளார்.

    ஆரம்பகால நடிப்பு வாழ்க்கை

    கீர்த்தனா மிக இளம் வயதிலேயே நடிக்கத் தொடங்கினார். 32க்கும் மேற்பட்ட படங்கள் மற்றும் 48 தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்தார். கற்பூரத கோம்பே, கங்கா-யமுனா, உபேந்திரா, லேடி கமிஷனர் மற்றும் சிம்ஹாத்ரி ஆகியவை இவரது நடிப்பில் பிரபலமானாவை. தமிழில் 1992 ஆம் ஆண்டு வெளியான நாளைய தீர்ப்பு படத்தில் நடிகர் விஜய்யுடன் இணைந்து நடித்தார். அவரது நடிப்பிற்காக பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றார்.

    துணிச்சலான முடிவு

    15 வயதில், கீர்த்தனா கல்வியில் கவனம் செலுத்துவதற்காக சினிமாவில் வெற்றியின் உச்சத்தில் இருந்த போதே, நடிப்பிலிருந்து விலக முடிவெடுத்தார். இந்த முடிவு சிவில் சர்வீஸ் நோக்கிய அவரது பயணத்தின் துவக்கத்திற்கு அடித்தளமான அமைந்தது.

    சிவில் சர்வீசஸ் பயணம்

    இந்தியாவின் கடினமான தேர்வுகளில் ஒன்றான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெறுவது என்பவது ஒரு சவாலான பயணம். இதில் கீர்த்தனாவும் பல பின்னடைவுகளைச் சந்தித்தார். ஆறு முறை முயற்சிகள் எடுத்து இறுதியாக வெற்றி எனும் இலக்கை அடைந்தார். 2011 ஆம் ஆண்டில், அவர் கர்நாடக நிர்வாக சேவைகள் (கேஏஎஸ்) தேர்வில் தேர்ச்சி பெற்று இரண்டு ஆண்டுகள் கேஏஎஸ் அதிகாரியாகப் பணியாற்றினார். இதனையடுத்து யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற அவரது உறுதியை வலுப்படுத்தியது.

    யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி

    2019 ஆம் ஆண்டில், கீர்த்தனா யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வில் 167 என்ற அகில இந்திய தரவரிசை (ஏஐஆர்) பெற்றார். எழுத்துத் தேர்வில் 794 மதிப்பெண்களும், ஆளுமைத் தேர்வில் 190 மதிப்பெண்களும் பெற்று மொத்தம் 984 மதிப்பெண்களைப் பெற்று வெற்றியாளர் ஆனார்.

    தற்போதைய நிலை

    கீர்த்தனா இன்று, ஐஏஎஸ் அதிகாரியாக கர்நாடகாவின் சிக்கமகளூர் மாவட்டத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றுகிறார். வெள்ளித்திரையிலிருந்து பொது சேவைக்கான அவரது பயணம் விடாமுயற்சியும், உறுதியும் இருந்தால் வெற்றி சாத்தியமாகும் என்பதை எடுத்துக்காட்டுகிறது.

    Discover the inspiring journey of HS Keerthana, a former actress who left her film career to become an Indian Administrative Service (IAS) officer.

    banner India
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp
    News Desk

    Related Posts

    இந்தியாவின் இரண்டாவது பெரிய கிரிக்கெட் மைதானம் திறப்பு

    14 October 2025

    கால்பந்து விளையாட்டு ஜாம்பவானின் சுற்றுப்பயணம்: இந்தியா திரும்புவதை உறுதிப்படுத்திய மெஸ்ஸி.

    10 October 2025

    சிறந்த பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த Physics Wallah இணை நிறுவனர் அலோக் பாண்டே

    9 October 2025

    மனித விண்வெளிப் பயணங்களில் இந்தியா நுழைவதைக் குறிக்கும் வகையில், வியோமித்ராவை ஏவ இஸ்ரோ தயாராகிறது.

    8 October 2025
    Add A Comment

    Comments are closed.

    Editors Picks
    Top Reviews
    Advertisement
    About Us
    About Us

    Welcome to channeliam.com, the first AI-powered digital newsroom in India that revolutionizes the way news is produced, delivered, and consumed. Our media startup is dedicated to uplifting society by providing accurate, reliable and unbiased information.

    Subscribe to Updates

    Get the latest creative news about entrepreneurs, startups, and businesses.

    Updates
    • இந்தியாவின் இரண்டாவது பெரிய கிரிக்கெட் மைதானம் திறப்பு
    • கால்பந்து விளையாட்டு ஜாம்பவானின் சுற்றுப்பயணம்: இந்தியா திரும்புவதை உறுதிப்படுத்திய மெஸ்ஸி.
    • சிறந்த பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த Physics Wallah இணை நிறுவனர் அலோக் பாண்டே
    • மனித விண்வெளிப் பயணங்களில் இந்தியா நுழைவதைக் குறிக்கும் வகையில், வியோமித்ராவை ஏவ இஸ்ரோ தயாராகிறது.
    • கோடீஸ்வரர் பட்டியலில் இணைந்த சென்னை தொழிலதிபர்
    YouTube Facebook Instagram X (Twitter) Pinterest RSS
    © 2025 Likes and Shares Pvt Ltd. Powered By arbaneo

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Change Language
    Malayalam
    English
    Hindi
    Change Language
    Malayalam
    English
    Hindi